×

பூதலூரில் காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் நாள் முகாம்

திருக்காட்டுப்பள்ளி, டிச. 25: தஞ்சை மாவட்ட மக்கள் அச்சமின்றி காவல் அதிகாரிகளை அணுகி தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன்பெற காவல் நிலையத்துக்கு வெளியே மனுக்களை பெற்று தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு வாரமும் காவல் கோட்டத்தின் ஒரு காவல் நிலைய பகுதியில் மக்கள் குறைதீர் முகாம் நடத்த எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் திருவையாறு கோட்டத்தில் பூதலூர் காவல் நிலைய பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் குறைதீர் முகாம் டிஎஸ்பி சித்திரவேல் தலைமையில் நேற்று நடந்தது. பூதலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் பங்கேற்றனர். இதில் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் 2, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள் 4, நேற்று முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் 11 ஆக என மொத்தம் 17 மனுக்களும் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்பட்டன.

Tags : day camp ,
× RELATED சித்தார்காடு ஊராட்சியில் மனுநீதி...